என்னைப் பற்றி

My photo
ஆத்தூர், தமிழ்நாடு, India

Blog Archive

Saturday, November 14, 2009

மாணவர்களே...!

என் மாணவ சமூகமே..!

களங்கம கொண்ட நிலவாய் நீ
இராதே...!
சுடர் தரும் சூரியனாய்
இரு...!

ஆயிரத்தில் ஒன்றாய் நீ
இராதே...!
ஆயிரத்தில் நீ ”ஒன்று’-ஆய்
இரு...!

மனம் சொல்லக் கேட்கும் மனிதனாய் நீ
இராதே...!
நீ சொல்லக் கேட்கும் மனத்தோடு
இரு...!

துன்பம் இல்லா வாழ்கையை நீ
கேட்காதே…!
அத் துன்பத்தை எதிர்கொள்ளும்
துணிவைக் கேள்...!

ஏனெனில்....

உன்னத படைப்பு
நீ…!
உயர்ந்த கருத்தினன்
நீ…!
உன்னை நீ
உணர்ந்திட்டால்
உலகின் சக்தி
நீ.....!!!
-அன்பு.
சிப்பி மாத இதழில்(நவம்பர்-2003)

No comments: